For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவராத்திரியையொட்டி ஷார்ஜாவில் சங்கீத உற்சவம்

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: நவராத்திரியையொட்டி ஷார்ஜாவில் சங்கீத உற்சவம் துவங்கியுள்ளது.

ஷார்ஜா ஏகதா நவராத்திரி மண்டபம் சங்கீதோட்சவம் அமைப்பின் சார்பில் நவராத்திரியையொட்டி சிறப்பு இசை விழா 24.09.2014 அன்று மாலை இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் துவங்கியது. இந்த விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இசை விழாவை இந்திய கன்சல்(கலாச்சாரம்) தீபா ஜெய்ன் துவக்கி வைத்தார்.

இசை விழாவின் துவக்கமாக திரிப்புனிதுரா ஸ்ரீ பாபு வீணை வாசித்தார். அவருடன் மன்னர் துரிகுரட்டி ஸ்ரீ பிரமோத் மிருதங்கமும், ஹைதராபாத் ஸ்ரீ ஜெயதேவ் வாசுதேவன் சிண்டல் கடமும் வாசித்தனர்.

இந்த ஆண்டு இசை விழாவில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

English summary
Sangeet Utsav festival is going on in Sharjah ahead of Navratri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X