கனவுகளை பரிசாக்கினாய்
பார்வைகளால்
குண்டு மழை பெய்து - என்
பருவத்தை பாழாக்கினாய்...!
யுத்தத்தில் சித்தம் தொலைக்கும்
ஈராக்காய் என்னை மாற்றினாய்..!!
அன்பெனும் காட்டுக்குள்
அடிக்கடி தொலைந்து போனேன்..
அதிரடிபடை போல நீ தான்
அடியேனை கண்டுபிடித்தாய்..!!
முத்தங்கள் தந்தென்னை
முழு வீச்சில் சாய்த்து விட்டாய்..
சித்தத்தில் தீ மூட்டி
சிறகில்லாமல் பறக்க வைத்தாய்.!!
கனவுகளை பரிசாக்கி
கண்களோரம் துயில் கொண்டாய்..
கார் கூந்தல் நடுவினிலே -- இந்த
காதலனை சொருகிக் கொண்டாய்..!!
நடந்து வரும் தேரழகில்
நளினங்கள் கூட்டி வந்தாய்...
கடந்து செல்லும் பாதையெல்லாம்
காதல் விதையைச் தூவிச் சென்றாய்...!!
மார்பை மறைக்கும் தாவணி
என் மனதை திறந்ததே..
ஆவனி மாதத் காற்றாய் -- மனது
உன் அழகில் மயங்குதே...!!
தேவதையே.. முகம் திருப்பு...
என்னை
திருடுவது உன் பொருப்பு...!
காதல் வந்தால் தினம் தவிப்பு...!
அதற்கு காரணமெல்லாம்
உன் கண்களிலிருக்கு
அது காமனின் அழைப்பு...!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.