தீ நாக்கே போதும் நிறுத்து. . .
உலகறியா வயதில் உருகிமாண்டதேனோ
அரசியல் ஆட்டம் ஆவி பறித்ததுவோ
ஆளும் விச விருட்சங்களால்
நாளைய விருட்சங்கள் முளையிலேயே
கருக்கப்பட்டனவோ கருத்தறுபட்டனவோ ?
நெஞ்சம் பதறுது
உள்ளம் குமுறுது
பொரித்து வைத்த புழுக்களாய்
பிஞ்சு உடல்கள் பிணக்குவியல்களாய்...
பொம்மைகளாய் அவை இருக்ககூடாதா - என
மனம் எண்ணி ஆறுதல் தேடுகின்றது.
பொசுக்கித்திண்ண தீ கூட துணிந்துவிட்டதே
என்ன நடக்கின்றது
ஏது நிகழ்கின்றது
புரியாமலேயே பொசுங்கி மாண்டனரே!
ஆயிரம் கனவுகளுடன்
ஆயிரம் ஆசைகளுடன்
அமர்ந்த பிஞ்சுகள்
ஆயுளின் நீட்சி இதுவரையென்று அறியவில்லையே!
கோர நிகழ்வை நினைக்க முடியவில்லை
ஜயோ, நெஞ்சு துடிக்கின்றுது
தீயே போதும் உன் கோரப்பசி
அடக்கு அடக்கு
திருமண மண்டபத்தில் நின் தாண்டவம்
தீர்ந்தது என்றிருந்தோம், - நீயோ
பிஞ்சு தோல் சுவைக்க நாக்கு நீட்டியிருக்கின்றாய்
ஒன்றா இரண்டா
ஒலம் அடங்கவில்லை
நாசி அழுகிறது ஊனுருகிய மணம்
நிறுத்து நிறுத்து
தீயே நிறுத்து உன் தீராத இக்கோபத்தை
பொசுக்கித் தின்ன உனக்கு
பூக்களா கிடைத்தன?
மொட்டவிழமுதலே - நீ
கருக்கியழித்துவிட்டாயே
புலன்கள் விழிக்க முன்னே
நீ புகுந்து கருக்கிவிட்டாய்
இத்துடன் நிறுத்து
ஓரு பிஞ்சின் உயிர்
ஓராயிரம் உயிரிற்கு நிகர்
போதும் நிறுத்து
தீயே நிறுத்து உன்
கோர தாண்டவத்தை
இதுவே இறுதியாயிருக்கட்டும்
- பரணி([email protected])












Click it and Unblock the Notifications