தண்டனை
Subscribe to Oneindia Tamil
தூரவிலகியும்
துளைத்துச் செல்லும்
மழைச்சாரல்.
கவனமாய் கடந்தும்
கலைத்துச் செல்லும்
காற்று.
இருள் அகற்றும்
கற்றையொளி
ஒற்றை நிலா.
இரவுக்கு ஜதிசொல்லி
சுருதிசேர்க்கும்
சிறுகுருவி.
இயற்கையின் தழுவல்
எங்கும்,எதிலும் சுகமாய்!
இரவும் இத்தனை
அழகானதா?
வருந்துகிறேன்...!
வாழாமல் தொலைத்த
வசந்த வாழ்க்கைக்கு..!
ஒவ்வொரு நொடியாய்
கரையும் இரவோடு...
கலைந்து போகும் என்கனவுகளும்....
விடியலில் உயிர்கள்
விழித்தெழும் போது
எனக்கு மட்டும்
நிரந்தர உறக்கம்...
நாளை.....
மரணதண்டனை.












Click it and Unblock the Notifications