For Daily Alerts
Just In
மெளனம்
உனது
மெளனம் குறித்து
எனக்கு நானே
பேசிக் கொண்டிருக்கிறேன்
கடந்த மூன்று மாதங்களாக.
எழுபது நாளுக்கு
மேலாகி விட்டது
- யோசித்துச் சொல்லுங்கள்
என்று சொல்லி
நீ கேட்டுவிட்டுப் போன
சில வினாக்களுக்கு
விடைகளை
யோசித்து வைத்து.
என்னைப் பற்றி
நீ சொன்னதும்
நினைத்ததும்
வேறு வேறு
என்கிறார்கள்
எனது புழுக்கத்தில்
இளைப்பாறி மகிழும்
என் நண்பர்கள்.
நம் இருவருக்குமாக
நடத்துனர் கொடுத்த
பயணச் சீட்டுகளில்
எது உன்னுடையது
என்று தெரியாமல்
என்னுடையதையும் சேர்த்து
பாதுகாத்து வருகிறேன்
உன்னிடம் காண்பித்து
தெரிந்து கொள்வதற்காக.
இன்னமும் எனக்கு
நம்பிக்கையிருக்கிறது
வருவேன் என்ற
உன் வார்த்தையின் மீது.
ஒரு வேளை நீ
வராமலே போய்விட்டால்
எப்படி நான்
கண்டுபிடிப்பது
நமக்கான
இரண்டு பயணச் சீட்டுகளில்
உனக்கான
ஒன்றை.
Comments
chennai astrology literature poems travel essay driver condolence tamilnadu homage kural art gallery florals jayabashkaran me
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]