ஒரு மரமாவது... எதேனும் தெரிந்து கொள்ள...- ரிஷி சேது
கனவுகளை தூக்கியெறிந்தாயிற்று
துரத்தும் எதிர்காலம் பற்றிய பயத்தில்
போட்டியும் பொறாமையும் நிறைந்த
உலகத்தின் காலச்சுழற்சியில் விழுந்தாயிற்று
அப்பன் பாட்டன் முப்பாட்டன்
செய்தன செய்து தின்பன தின்று
என் குடும்பம் நான் எனதென்று
சுய நலமியாய் வாழவும் பழகி
ஓடி ஓடி பணம் சேர்த்து
சோர்ந்து போய் திரும்பிப்பார்க்கையில்
நோய் நொடி எட்டிப்பார்க்க மெல்ல
ஞானம் வந்து உலகிற்கு ஏதோ
செய்வோமென நினைக்கயில்
மரண பயம் நீளும் கருணையெனும் போர்வையில்
யாருக்கொல்லாம் கொடுக்கலாம்?
இல்லையென வருவோர்க்கு கொஞ்சம்
கூடத்தில் வாழும் சொந்தத்திற்கு கொஞ்சம்
கடனில் தவிக்கும் நட்புக்கு கொஞ்சமென
நீளும் பட்டியலில் வரக்கூடும் சிலர்
பக்தி சொல்லி பறிப்பதற்கு
அஞ்சாமலிருக்கலாம்
எப்படியும் பிணி மூப்பு சாக்காடு இல்லாமல் போகாது
அதற்குள்...
ஒரு மரமாவது வைத்துவிட வேண்டும்
நிழலும் மழையும் தர இவ்வுலகிற்கு.....












Click it and Unblock the Notifications