For Quick Alerts
For Daily Alerts
Just In
எஞ்சியிருக்கும் கருத்த இரவுரிஷி சேது
நிசப்த நடு நிசி
எலும்பை ஊடுறுவும் காற்று
ஆடும் வேப்ப மரகிளை விட்டு பறக்கும் ஆந்தை
என் அறைக் கதவுகளை
அறைந்து சாத்திய பின்னும்
வந்துமிரட்டும் அமானுஷ்ய தனிமை
நெடு நாளாய் சாத்தியே கிடக்கும்
பக்கத்து அறைக்குள்ளிருந்து
அவ்வப்போது ஏதோ ஓடும் சத்தம்
பயத்தினுடே சேர்ந்துகொள்ளும்
இன்னமும் நானுனரா பேய்கள் பற்றிய எண்ணம்
எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சப்தம்
பேய்கள் பற்றிய என் சந்தேகத் தீக்கு
எண்ணையூற்றியது..
இந்த குடுகுடுப்பைக்காரன்
எதற்கு நடு நசிகளில்
உடுக்கை அடித்து போகிறான்
விடிந்த பின் சொல்லிக்கொண்டால் ஆகாதா
ஜக்கம்மா சொன்னகையோடுதான் சொல்லவேண்டுமா?
ஆயிற்று இன்னும் கொஞ்ச நேரம்தான் இரவு
முழுதுமாய் ரசித்துவிட வேண்டும்
விடியல் அறை முழுவதையும்
வெளிச்சத்தால் நிரப்பிவிடப்போகிறது
அதற்குமுன் ரசித்தாக வேண்டும்
இந்தத்தனிமையயையும் எஞ்சியிருக்கும்
கருத்த இரவையும்.....
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]