For Daily Alerts
Just In
ஞானமோ !
ஞானம் !
நேற்று கனவில்
தன் முதுமை கண்டான்
இன்று காலையில் ஓடுகிறான்
முதியோர் இல்லம் நோக்கி. . .
தாய், தந்தையை
தன் இல்லம் அழைத்து வர !
காதல் !
இரத்தச் சோகையாம் எனக்கு
மருத்துவமனையில் மரணப்படுக்கை
மனதிலோ. . . .
இளமையில் எவளோ ஒருத்திக்காக
நரம்பறுத்த இரத்தத்தால்
காதல் கடிதம் எழுதிய
மலரும்(மரண) நினைவுகள் !
கல்வி !
பள்ளிப் படிப்பைக்
கடந்த உன்மகன்
அடுத்து எங்கு பயணம் ?
மருத்துவமா ! பொறியியலா !
நண்பனைக் கேட்டேன்
நீதிமன்றம் என்றான்
நெற்றியில் அடித்தாற்போல்.
ஆகா! சட்டமா? என்றேன்.
அவன் சத்தமாய்ச் சொன்னான்.
மடையா!
நன்கொடை எவ்வளவு
தெரிந்து கொள்ள வேண்டாமா?
கடவுள் !
அழகிய அணிகலன்
உயரிய ஆடைகள்
உடலில் நறுமணம்
ஒப்பனைத் தோற்றம்
ஆடம்பர வாகனம்
அவசரமாய் ஆலயதரிசனம்
தொலைந்து போனது
ஒன்று மட்டும்
பக்தி !
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]