உனக்காக உறங்கும் இதயம் இதோ!
Subscribe to Oneindia Tamil
ஒளி நீ! இருள் நான்!
என்னுள் சுமையாய் இருந்த இதயம் இன்று தான் சுகமாய் தெரிகிறது அது என் கவிதையை சுமப்பதால்
உனக்காக உறங்கும் இதயம் இதோ! கனவில் உன்னை செதுக்க!
உனக்காக விழிக்கும் இதயம் இதோ! நிஜத்தில் உன்னை வடிக்க!
ஏனோ என் பேனாவால், என் நோட்டுப் புத்தகத்திற்கு, முத்தம் கொடுத்தேன். வரிகளாய் அதில் நீ தோன்றினாய்!
ஒருவேளை வரிகளுக்கு நான் முத்தம் கொடுத்திருந்தால் நீ கவிதையாயிருப்பாயோ!
இருண்ட என் இதயத்திற்கு வெளிச்சம் தந்த என் கவி தேவனே,
உன் வெளிச்சத்தினை என்றும் எதிர்ப் பார்க்கும் இருள் தேவி நான்!
உன் ஒளியும் என் உயிரும் ஒன்று தான் எனக்கு இதில் எது போனாலும் நான் வெறும் சடலம் தான்.
- லக்ஷ்மி (mailto:[email protected])












Click it and Unblock the Notifications