அரிசி கடத்தலில் பெண்கள்: கருணாநிதி வருத்த கவிதை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்குத் தரப்படும் அரிசியை கடத்தும் செயலில் பெண்களே ஈடுபடுவது மிகுந்த வருத்தம் தருவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வேதனைக் கவிதை:

மகளிர் நலனை முன்னிட்டு மலிவு விலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச் சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?

தேட்டை போடும் கூட்டமொன்று இந்த தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்

திருடிப் பிழைத்துத் திரவியம் குவிப்போர் திசை திருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?

எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!

அன்பும், கருணையும்தான், அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;

அக்ரமச் செயல்களிலேதான் ஆணும், பெண்ணும் சமம் என்று
அடித்துப் பாட வருவான் புதிய பாரதி!

அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே;-

அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+