அரிசி கடத்தலில் பெண்கள்: கருணாநிதி வருத்த கவிதை

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வேதனைக் கவிதை:
மகளிர் நலனை முன்னிட்டு மலிவு விலை அரிசி கொடுத்தால் - அதை
மகளிர் சிலரே கூட்டுச் சேர்ந்து கடத்தல் வேட்டை நடத்துவதோ?
தேட்டை போடும் கூட்டமொன்று இந்த தேசத்தில் இருக்கலாமா?
தேர்தல் அறிக்கை வாக்குறுதி; திமுக நிறைவேற்றிக் களிக்கும்போது; அதைத்
திருடிப் பிழைத்துத் திரவியம் குவிப்போர் திசை திருப்ப முனையலாமா?
தின்னக் கிடைத்த உணவில் மண்ணையள்ளிப் போடுவதுதான் நியாயமாகுமா?
எத்தனை உயிர்கள் வாழ்வதற்குப் பயன்படும் அரிசி
எத்தர்கள் கூட்டம் தின்று ஏப்பமிடுவதற்கோ; அடச்சீ!
அன்பும், கருணையும்தான், அம்மாவும் தாயும்; அன்னையுமென்பார்
அவர்களே அரிசி கடத்த ஆரம்பித்து விட்டால்;
அக்ரமச் செயல்களிலேதான் ஆணும், பெண்ணும் சமம் என்று
அடித்துப் பாட வருவான் புதிய பாரதி!
அதுவரையில் காத்திராமல்
அய்யாமாரே; அம்மாமாரே;-
அரிசி கடத்தல் விட்டொழிப்பீரே;
அல்லால் நல்லோர் பழிப்பாரே!
இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications