சீக்கிரம் எழு- சிறகு விரி- சக்கராயுதம் சுழற்று.. கருணாநிதிக்கு வைரமுத்து வாழ்த்து Exclusive

திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து கவிதை வெளியிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதிக்கு வைரமுத்து வாழ்த்து | vairamuthu | Exclusive | karunanidhi- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து சிறப்பு வாழ்த்து கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    Vairamuthu birthday wishes for Karunanidhi

    இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக அவருடன் நட்பு பாராட்டி வரும் கவிப்பேரரசு வைரமுத்து, கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கவிதை ஒன்றை இயற்றியுள்ளார்.

    'வாழையடி வாழைகளை வாழவை வா' என்ற தலைப்பில் அவர் இயற்றியுள்ள அந்த கவிதை பின்வருமாறு:

    வாழையடி வாழைகளை
    வாழவை வா

    தமிழ்நாட்டுக்குச் சங்கீதமில்லை
    நீ மெளனித்திருக்கிறாய்
    வீதிகளில் மணியோசை இல்லை
    நீ வீட்டில் இருக்கிறாய்
    அதிகாலை எழுப்பும் அலைபேசி இல்லை
    நீ சயனித்திருக்கிறாய்
    கவியரங்குகளில் கரவோசை இல்லை
    விரல்களுக்கு விடுமுறை தந்திருக்கிறாய்
    ஞானத்தின் நிசப்தமாய் நீயிருக்கிறாய்

    சிங்கம் செய்தித்தாள் வாசிக்கவில்லை
    தலையே இல்லாமல் தலைப்புச் செய்திகள்
    ராஜாளிக்கு உடல்நலமில்லை
    ஊர்க்குருவிகளின் ரகளை ஓயவில்லை

    Vairamuthu birthday wishes for Karunanidhi

    உறைந்துபோன காலத்தை
    உற்றுப் பார்ப்பதுபோல்
    உன்னையே பார்க்கிறேன்
    தமிழ்நாடு கிடந்தது
    அதோ அந்த ஐவிரல் இடுக்கில்
    முத்தமிழ் கிடந்தது
    உன் மூளையின் முடுக்கில்
    காலம் நடந்தது
    உன் கண்களின் அசைவில்
    மலைகள் மண்டியிட்டன
    காற்று தகவல் சொன்ன உன்
    காலடி ஓசையில்
    டெல்லியில் ஊரடங்கு உத்தரவு
    நீ துண்டை உதறிய
    தொலைக்காட்சி பார்த்து
    இன்று
    ஞானத்தின் நிசப்தமாய்
    நீயிருக்கிறாய்

    எப்போதாவது உன் ஓரக்கண்ணில்
    அபிநயம் பிடித்தபடி
    ஒரு துளி வழிகிறது
    அது
    நிகழ்காலத்தின்
    துக்கமாகவல்ல
    எதிர்காலத்தின்
    ஆனந்தக் குறியீடாய் ஆகட்டும் அய்யா

    சீக்கிரம் எழு
    சிறகு விரி
    வாழையடி வாழைகளை
    வாழவை வா
    நாற்காலியிலிருந்தே
    சக்கராயுதம் சுழற்று
    கண்ணபிரான் நீ
    அர்ச்சுனன் தளபதி"

    இவ்வாறு அந்த வாழ்த்து கவிதையை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+