"நோ அபராதம்".. பாஸ்ட் டேக் பயனாளிகளுக்கு நாடு முழுக்க மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்.. செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டோல் கேட்டை கடந்த 10 நிமிடத்திற்குள் பாஸ்ட் டேக்கில் இருந்து பணம் பரிமாற்றம் நடக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது டோல் கேட் பயனாளிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறை அல்ல.. வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, வங்கிகள் டோல் கேட் பயனாளியின் பாஸ் டேக்கில் இருந்து பணத்தை முறையாக மாற்ற வேண்டும். முறையாக பரிவர்த்தனையை தாமதம் இன்றி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

automobile transport

புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.

அதே சமயம் முதலில் பாஸ்ட் டாக்கில் என்னென்ன விதிகள் மாறி உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.

1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.

2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

3. அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.

6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது. இனிமேல் பிளாக் லிஸ்ட் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன மாற்றங்கள் டோல் கேட்டில் உள்ளன:

புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.

இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

பாஸ்ட் டாக் காரணமாக டோல் கேட்டில் எப்போதும் போலவே போக்குவரத்து உள்ளது. ஆனால் இந்த முறை காத்திருப்பு நேரம் குறைந்துவிட்டது. ஏனென்றால் யாரும் டோல் கேட்டில் ரீ சார்ஜ் செய்வதற்கு நிற்கவில்லை. அதேபோல் லைனில் நின்ற பின் யாரும் ரீ சார்ஜ் செய்வதற்கு காலம் எடுப்பது இல்லை.

இதனால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே சமயம் பலர் 60 நிமிடங்களுக்கு உள்ளாக ரீ சார்ஜ் செய்ததால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டி உள்ளது. சிலருக்கு இன்னும் பல காரணங்களால் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்ததால் அவர்களும் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+