அமலுக்கு வந்த புது பாஸ்ட் டாக் விதி.. இனி பயணம் செய்யும் முறையே மாறப்போகுது.. இதை எல்லாம் கவனியுங்க
சென்னை: புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.
முதலில் பாஸ்ட் டாக்கில் என்னென்ன விதிகள் மாறி உள்ளன என்று பார்க்கலாம்.

1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.
2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
3. அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.
6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது. இனிமேல் பிளாக் லிஸ்ட் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னென்ன மாற்றங்கள் டோல் கேட்டில் உள்ளன:
புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.
இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
பாஸ்ட் டாக் காரணமாக டோல் கேட்டில் எப்போதும் போலவே போக்குவரத்து உள்ளது. ஆனால் இந்த முறை காத்திருப்பு நேரம் குறைந்துவிட்டது. ஏனென்றால் யாரும் டோல் கேட்டில் ரீ சார்ஜ் செய்வதற்கு நிற்கவில்லை. அதேபோல் லைனில் நின்ற பின் யாரும் ரீ சார்ஜ் செய்வதற்கு காலம் எடுப்பது இல்லை.
இதனால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே சமயம் பலர் 60 நிமிடங்களுக்கு உள்ளாக ரீ சார்ஜ் செய்ததால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டி உள்ளது. சிலருக்கு இன்னும் பல காரணங்களால் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்ததால் அவர்களும் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
FASTag பிளாக் லிஸ்ட் ஆகி உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்:
• நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் FASTag செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக FASTag வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.
• அதிகாரப்பூர்வ NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) உள்நுழையவும்.
• பேலன்ஸ் முறையாக உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.
• உங்கள் கணக்கிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்யவும்.
• கே.ஒய்.சி முறையாக இருக்கிறதா .. பிளாக் லிஸ்ட் நோட்டிபிகேஷன் வந்துள்ளதாக என்பதை பார்க்கவும்.
• இதை எல்லாம்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications