மங்காத்தா ரீ ரிலீஸ்.. விஜய்யோடு போட்டோவை வெளியிட்டு, வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை! இவரு நல்ல தெளிவு தான்!
சென்னை: அஜித் குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தின் ரீரிலீஸ், இன்று ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாறியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ள இந்த படம், அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு இழுத்து வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஒரு பதிவு தான் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா, அவரது திரைவாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வழக்கமான ஹீரோ இமேஜை உடைத்து, முழுக்க நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரத்தில் அஜித்தை காட்டிய படம் என்பதால், இன்றுவரை இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அந்த படத்தின் ரீரிலீஸ் இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் பக்கா பிளானுடன் இந்த மறுவெளியீட்டை கையில் எடுத்துள்ளனர். அதற்கேற்ப ப்ரோமோஷன், திரை எண்ணிக்கை, ப்ரீ புக்கிங் என அனைத்திலும் மங்காத்தா முன்னிலை வகிக்கிறது.
ரீரிலீஸுக்கு முன்பே முன்பதிவு அமோகமாக நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ரீரிலீஸில் சாதனை படைத்த விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா போன்ற படங்களின் வசூலுக்கு மங்காத்தா சவால் விடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும் மங்காத்தா ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ஸ்டைலில் கலகலப்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மங்காத்தா கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் கசியவிடாதீர்கள்" என ரசிகர்களிடம் நகைச்சுவையாக கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக இந்த கிளைமாக்ஸ் குறித்த அவரது பதிவு தான் அஜித் ரசிகர்களிடையே அதிகமாக வைரலாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், மங்காத்தா படப்பிடிப்பு காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித், விஜய் மற்றும் வெங்கட் பிரபு மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த பதிவில், "இது மறக்க முடியாத ஒரு தருணம். இனி இப்படியொரு தருணம் மீண்டும் நடக்க வாய்ப்பு இருக்காது போல தோன்றுகிறது. ஆனாலும் என் கணிப்பு பொய்யாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் "அஜித் - விஜய் கூட்டணி மீண்டும் உருவாகுமா?" என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. உண்மையில், நீண்ட காலமாக அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை வெங்கட் பிரபுவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

மங்காத்தா படம் வெளியான பிறகு கூட, விஜய் வெங்கட் பிரபுவிடம், "இந்த படத்தில் அர்ஜுன் ரோலில் நான் நடித்திருக்கலாமே" என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் பிறகு, இரு பெரிய நட்சத்திரங்களையும் வைத்து ஒரு படம் எடுக்க வெங்கட் பிரபு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் முழுமையாக அரசியலுக்கு சென்றுள்ளதால், அந்த வாய்ப்பு இனி சாத்தியமில்லை என்றே சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
இருந்தாலும், வெங்கட் பிரபு விஜயை வைத்து GOAT படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக மாற்றினார். அந்த படத்திலும், மங்காத்தா போலவே விஜய்க்கு நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரத்தை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
இந்நிலையில், மங்காத்தா ரீரிலீஸை ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ரசிகர் கொண்டாட்டமாக மாற்றுவதில் வெங்கட் பிரபு மற்றும் படக்குழு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். ரீரிலீஸ் தினத்தை முன்னிட்டு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பல திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். சில தியேட்டர்களில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் நேரடியாக பதிலளித்துள்ளார். இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வைரலாகி வருகின்றன.
ஆனால், இவ்வளவு பெரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கூட, அஜித் வழக்கம் போல அமைதியாகவே இருக்கிறார். மங்காத்தா ரீரிலீஸ் குறித்து அவர் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, எந்த சமூக வலைதள பதிவும் வெளியிடவில்லை. ரசிகர்கள் கொண்டாடட்டும், படம் பேசட்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மௌனமே தான் அஜித்தின் ஸ்டைல் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications