8 வயது சிறுவனுக்கு கொரோனா? பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ!
கொரோனா வைரஸ் காரணமாக 8 வயது சிறுவன் ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக பொய்யான செய்தி பரவி வருகிறது.
டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக 8 வயது சிறுவன் ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக பொய்யான செய்தி பரவி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம் வைரசுக்கு இணையாக பொய்யான செய்திகளும் இணையத்தில் தீவிரமாக, வேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக 8 வயது சிறுவன் ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக பொய்யான செய்தி பரவி வருகிறது. Prayer Request Chaple என்ற பக்கம் இந்த போட்டோவை பகிர்ந்து உள்ளது.

அதில் 8 வயது சிறுவன். இவன் எங்கள் மகன். உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான இமேஜ் ஆகும்.
இந்த புகைப்படம் 2019ல் வெளியானது, ஆண்டி வேர்ல்ட் என்ற நபர் வெளியிட்ட புகைப்படம் ஆகும். இதை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன் என்று பொய்யாக பரப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications