Fact check கேரளாவின் லுலு மாலில் மூவர்ணக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக இருந்ததா? உண்மை என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள லுலு மாலில் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை விட பாகிஸ்தான் நாட்டு கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அது முற்றிலும் பொய் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் வணிக வளாகமான லுலு மால் திறக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் யூசுப் அலி, துபாயில் மிகப் பெரிய தொழிலதிபராவார். இவர் அங்கும் ஷாப்பிங் மால்களை நடத்தி வருகிறார். தமிழகத்திலும் கோவையில் இந்த மால் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை சற்று குறையும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் தற்போது வதந்தி பரவ காரணமாகிவிட்டது. அதாவது கேரளாவில் உள்ள லுலு மாலில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை விட பாகிஸ்தான் நாட்டு கொடி பெரியதாக வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. இந்தியக் கொடி மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் கொடிகளை காட்டிலும் பாகிஸ்தான் கொடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சில விஷமிகள் தகவலை பரப்பினர்.
இந்த புகைப்படத்தையும் சமூகவலைதளங்களில் பரப்பினர். மேலும் லுலு மால் கொடிகளை வைக்கும் விதிகளை மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தியக் கொடியை சிறியதாகவும் தாழ்வாகவும் வைத்துவிட்டு பாகிஸ்தான் கொடியை ஏன் பெரியதாகவும் உயரத்திலும் வைக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து இந்த ட்வீட்டில் நெட்டிசன் ஒருவர் இது லாகூரோ பெஷாவரோ, இஸ்லாமாபாத்தோ அல்ல. இது கேரளா! இந்த புகைப்படம் கொச்சியில் உள்ள லுலு மாலில்தான் எடுக்கப்பட்டது. உலக கோப்பையை கொண்டாட பல்வேறு நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பாகிஸ்தான் கொடி உயரத்திலும் இந்திய கொடி அதைவிட சற்று உயரம் குறைவாகவும் ஏற்றப்பட்டுள்ளது. இது ஏன் என ஓனர் யூசுப் அலியை டேக் செய்து இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இது தவறான தகவல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்போதுமே எது சரி, எது தவறு என்பது பார்ப்போரின் கோணத்தில் உள்ளது. புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டது, எந்த ஆங்கிளில் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் எடுக்கப்பட்டது, எந்த தளத்தில் இருந்து கொண்டு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
ஆய்வில் எல்லா கொடிகளும் ஒரே அளவில் ஒரே லிவரில் ஏற்றப்பட்டிருந்தது. வெவ்வேறு ஆங்கிளில் இருந்து பார்க்கும் போது ஒரு கொடி பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் தெரிந்தது. எனவே அங்கு கொடி ஏற்றப்பட்டதில் எந்த தவறும் இல்லை. பார்க்கும் பார்வைகளில்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கேரளாவில் லுலு மாலில் பாகிஸ்தான் கொடி, இந்திய கொடியை விட உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது என சமூகவலைதளங்களில் புகைப்படம் பரவல்.
முடிவு
லுலு மாலில் எல்லா நாட்டு கொடிகளும் ஒரே அளவில் ஒரே உயரத்தில் ஒரே லிவரில்தான் ஏற்பட்டிருந்தது.
ரேட்டிங்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications