என்னாது.. அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடா?.. சுத்தமான பொய்ச் செய்தி உலா வருது.. நம்பாதீங்க!
டெல்லி: அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய்யான செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் மாநில அரசே அது போல் எதுவும் இல்லை என்றும் தேவைக்கும் அதிகமாக உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சிலருக்கு என்ன செய்வது என தெரியாமல் பொய்யான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர்.

இதனால் மக்கள் பீதி அடைகிறார்கள். இப்படித்தான் அஸ்ஸாமில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த தகவல் பொய்யானது என்பது அந்த மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அஸ்ஸாம் மாநில போலீஸார் கூறுகையில் மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு என யாரோ மோசடி பேர்வழிகள் வதந்தியை பரப்ப முயற்சிக்கிறார்கள்.
ஆனால் இதில் உண்மையில்லை, இதுவதந்தி. அடிப்படை ஆதாரமற்றது. மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை. அது மட்டுமல்லாமல் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. எனவே மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications