அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா? முதலில் இதை படிங்க.. வெளியான ஷாக் ஆய்வு
சென்னை: பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் புவி மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக்தான். உணவு பொட்டலங்கள் முதல் குடி தண்ணீர் வரை அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் பொருட்களில் தான் அதிகம் கிடைப்பதை பார்க்க முடிகிறது. நீர் நிலைகள், அடர்ந்த வனங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்கள் சென்று சேர்ந்துவிட்டன.

பிளாஸ்டிக் பொருட்கள்: இப்படி பிளாஸ்டிக் சூழ் உலகில் தான் இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது என சொன்னால் மிகையல்ல. பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதன் வாயிலாக மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியாகி அதிரவைத்தது மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது ஆகும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்: இருதய பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினைகள், புற்று நோய் கூட பாதிக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்த அதிகரிக்க கூடும் என்று அதிர்ச்சிகர ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் செல்வதன் மூலம், ரத்த அழுத்தம் உயரலாம் என்ற புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஜர்னல் என்ற இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
மருந்தக துறை ஆய்வு: ஆஸ்திரியாவில் உள்ள டன்பே தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக துறை இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் எதிலும் அடைக்காத தண்ணீரை ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் நுகர்வு குறையும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவு குறைவதையும் கண்டுபிடித்தனர்.
5 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்: இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வின் மூலம் அனுமானித்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரை முடிவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, சராசரியாக ஒரு மனிதன் 5 கிராம் அளவுக்கு மைக்ரோபிளாஸ்டிக்குகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கொதிக்க வைத்த தண்ணீர்: மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் செல்வதை தவிர்க்க நீரை கொதிக்க வைப்பது, குழாய் நீரை வடிகட்டி குடிப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையை பின்பற்றினால் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோ பிளாஸ்டிக்ஸ்களை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications