Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா? முதலில் இதை படிங்க.. வெளியான ஷாக் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இன்றைய கால கட்டத்தில் புவி மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக்தான். உணவு பொட்டலங்கள் முதல் குடி தண்ணீர் வரை அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் பொருட்களில் தான் அதிகம் கிடைப்பதை பார்க்க முடிகிறது. நீர் நிலைகள், அடர்ந்த வனங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்கள் சென்று சேர்ந்துவிட்டன.

Health Plastic Bottle

பிளாஸ்டிக் பொருட்கள்: இப்படி பிளாஸ்டிக் சூழ் உலகில் தான் இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது என சொன்னால் மிகையல்ல. பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதன் வாயிலாக மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியாகி அதிரவைத்தது மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது ஆகும்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்: இருதய பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினைகள், புற்று நோய் கூட பாதிக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்த அதிகரிக்க கூடும் என்று அதிர்ச்சிகர ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் செல்வதன் மூலம், ரத்த அழுத்தம் உயரலாம் என்ற புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஜர்னல் என்ற இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

மருந்தக துறை ஆய்வு: ஆஸ்திரியாவில் உள்ள டன்பே தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக துறை இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் எதிலும் அடைக்காத தண்ணீரை ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் நுகர்வு குறையும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவு குறைவதையும் கண்டுபிடித்தனர்.

5 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்: இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வின் மூலம் அனுமானித்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரை முடிவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, சராசரியாக ஒரு மனிதன் 5 கிராம் அளவுக்கு மைக்ரோபிளாஸ்டிக்குகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

கொதிக்க வைத்த தண்ணீர்: மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் செல்வதை தவிர்க்க நீரை கொதிக்க வைப்பது, குழாய் நீரை வடிகட்டி குடிப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையை பின்பற்றினால் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோ பிளாஸ்டிக்ஸ்களை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+