Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒவ்வொரு தமிழர்களும் அறிய வேண்டியது.. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கும் அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 48900 பேர் மருத்துவ பரிசோதனையால் பயன் அடைந்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 48900 பேர் மருத்துவ பரிசோதனையால் பயன் அடைந்துள்ளனர்.

Full body checkups are done chennai omandurar government hospital at very low cost

ஓமந்தூராரர் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தொடங்கப்பட்டது.

கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் பிளஸ் என 4 வகை பரிசோதனைகள் முறையே ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரத்த பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல்,இசிஜி, அல்டரா சவுண்ட், தைராய்டு, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டறியும் டிரெட்மில் பரிசோதனைகள் என 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டிலேயே வேறு எந்த அரசு மருத்துவனையிலும் இல்லாத வகையில் அதி நவீன கட்டமைப்புடன் இந்தப் பரிசோதனை மையம் அமைந்திருப்பதால், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இதுவரை 1800 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு டிரெட் மில் பரிசோதனைகள் என மொத்தம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலேயே முதன் முறையாக கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்கள் கர்ப்பிணிகளுக்காக பிரத்யேகமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1000 மற்றும் ரூ.2000 ஆகிய இரு வகையான பரிசோதனைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை 400க்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது, ஓமந்தூரர் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்துக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கு இங்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதே இதற்கு காரணம்,. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத சில உயர் மருத்துவ உபகரணங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது அடுத்தகட்டமாக கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணங்கள் மற்றும் மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை 1.50 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பபட்டு அதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+