வெறும் வயிற்றில் வெந்தய நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் நீரிழிவு நோயாளிகள் இந்த வெந்தய நீரை குடித்தால் லோ சுகர் ஆகிவிடுமா என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா?

health fenugreek

பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகின் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது.

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம்.

வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. கீழே வெந்தயம் ஊற வைத்த நுரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும். ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது.

இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது. செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

அதுவும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது மற்றும் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. அதோடு இது குடலியக்கத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதால், அது செல்களில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது.

மேலும் இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கிறது.

வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

வெந்தய நீரைத் தயாரிப்பது என்பது மிகவும் ஈஸி. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். என்ன தான் வெந்தயம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+