For Daily Alerts
Just In
நான் ராணுவ அமைச்சராக இருக்கையில் சீனாவுக்குள் 4 கிமீ வரை சென்றேன் தெரியுமா?: முலாயம்
இது குறித்து அவர் ஆக்ராவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெளியுறவுத்துறை விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடு சரியில்லை. தற்போதுள்ள சூழலில் எந்த நாட்டையும் இந்தியாவின் நட்பு நாடு என்று கூற முடியாது. இதற்கு காரணம் நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே காங்கிரஸ் அரசு கடைபிடித்து வரும் தவறான கொள்கைகள் தான். வரும் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியோ அல்லது மூன்றாவது அணியோ அடுத்த ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறும். அதன் பிறகு இந்தியாவை பிற நாடுகள் சமமாக நடத்தும்.
நான் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சீனாவுக்குள் 4 கிமீ தூரம் வரை நடந்து சென்றேன். அப்போது என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. முசாபர்நகரில் புதிதாக வன்முறை எதுவும் வெடிக்கவில்லை. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
Comments
English summary
Samajwadi party chief Mulayam Singh Yadav told that he walked four km into the Chinese border unchallenged when he was the defence minister.
Story first published: Thursday, September 12, 2013, 10:04 [IST]