எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 93 ஆயிரம் சம்பளம்.. 12 ஆம் வகுப்பு தகுதி போதும்.. செம சான்ஸ்
சென்னை: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,526 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?, கல்வித்தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,526 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டெனோகிராபர்/ Combatant ஸ்டெனோகிராபர், தலைமை காவலர் ஆகிய பணியிடங்களுக்குதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு முறை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: சி.ஆர்.பி.எப், பி.எஸ்.பி.எப், இந்தோ திபெத் காவல் படை பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. அதேபோல உதவி சப் இன்ஸ்பெக்டர் (Stenographer) மற்றும் வாரண்ட் ஆபிசர் பணிகளில் 243 பணியிடங்களும் , தலைமை காவலர் மற்றும் ஹவில்தார் (கிளர்க்) பணியிடங்களில் 1,283 பணியிடங்களும் என மொத்தம் 1,526 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை ஆகஸ்ட்1- 2024 தேதிப்படி 18 - 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு முறை: கணினி வழி எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிபிடி எனப்படும் கணினி வழித்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும்.
கணினி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
சம்பளம் எவ்வளவு?: உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு: ரூ.29,200- 92,300 வரை சம்பளமாக கிடைக்கும் ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.25,500- 81,100 வரை சம்பளமாக கிடைக்கும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 08.07.2024 கடைசி தேதி ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் ஒரு முறை படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பினை தெரிவிக்க https://rectt.bsf.gov.in/#bsf-current-openings - இங்கே கிளிக் செய்யவும்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications