சிஆர்பிஎஃப் படை பிரிவில் வேலைவாய்ப்பு.. 2,15,900 ரூபாய் சம்பளம்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு ..விவரம்
டெல்லி : சிஆர்பிஎஃப் படை பிரிவில் கமாண்டன்ட் மற்றும் துணை கமாண்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சிஆர்பிஎஃப்பில் பொறியியல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அல்லது மாநில அரசாங்கத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைத்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 23, 2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
சிஆர்பிஎஃப்பில் 2 கமாண்டன்ட் மற்றும் 13 துணை கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் தகுதி, தேர்வு செயல்முறை குறித்து சிஆர்பிஎப் இணையதளத்தில் படிந்துஅறிந்து கொள்வது நல்லது.
காலியிட விவரங்கள்
கமாண்டன்ட் (என்ஜினியர்) 2 பதவிகள்
• துணை கமாண்டன்ட் (என்ஜினியர்) 11 பதவிகள்
வயது: 52 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: கமாண்டன்ட் (என்ஜினியர்) 2,15,900 வரை சம்பளம், துணை கமாண்டன்ட் (என்ஜினியர்) பணிக்கு 2,08,700 ரூபாய் வரை மாதம் சம்பளம்
தகுதி: அரசு துறைகளில் சிவில் இன்ஜினிராக 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் அல்லது ஐந்து ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் தகவல்கள்
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான சான்றிதழ்களுடன் துணை ஆய்வாளர் ஜெனரல் (பேர்), டைரக்டரேட் ஜெனரல், சிஆர்பிஎஃப், சிஜிஓ வளாகம், தொகுதி எண் 1, லோதி சாலை, புது டெல்லி -110003 க்கு அனுப்ப வேண்டும்.
ஆரம்பத்தில் மூன்று வருட காலத்திற்கு பணி நீடிக்கப்படலாம். முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.












Click it and Unblock the Notifications