பிரபல வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு அடித்தது யோகம்.. நல்ல சம்பளம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெடரல் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.4.59 லட்சம் முதல் அதிகபட்சமாக 6.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

நாட்டின் பிரபல தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி கடந்த 1931 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த வங்கியில் தற்போது 15,212 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 14,604 பேர் முழுநேர பணியாளர்கள், 608 பேர் பகுதி நேர பணியாளர்கள் ஆகும். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் 222 கிளைகளையும், இதில் சென்னையில் மட்டும் 33 கிளைகள் உள்ளன.

federal-bank-recruitment-2025-apply-now-for-associate-officer-sales-position-degree-holders-apply

பணியிடங்கள் விவரம்:

தற்போது இந்த வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபெடரல் வங்கியில் அசோசியேட் ஆபீஸர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ஃபெடரல் வங்கியில் அசோசியட் ஆபீசர்( விற்பனை) Associate Officers (Sales) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு என படித்து இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்களை பொறுத்து சம்பளம் வேறுபடும். குறைந்தது ஆண்டுக்கு ரூ.4.59 லட்சம் முதல் அதிகபட்சமாக 6.19 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் காப்பீடு செய்யப்படுவர். இதேபோன்று பணிக்கொடை, சலுகை வட்டி விகிதத்தில் கடன், மருத்துவ காப்பீடு என பல சலுகைகள் வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ் சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆப்டிடியூட் ட்டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையத்தை பொறுத்தவரை தமிழத்தில் சென்னை, கோவை மற்றும் சேலத்தில் அமைக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.federalbank.co.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.350 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் 10.06.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2025 ஆகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ள: https://www.federalbank.co.in/documents/d/guest/notification-1

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+