+2 போதும்.. ரூ.2.8 லட்சம் ஊதியத்தில் வேலை..செப்.,30, அக்.,1ல் சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிளஸ் 2 அல்லது டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது சென்னையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னைய நாவலூர், சோழிங்கநல்லூரியில் நியமனம் செய்யப்படுவதோடு ரூ.2.8 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
உலகில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். எச்சிஎல் டெக் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எச்சிஎல் நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் International Voice Process for Banking Sector (Freshers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தாரர்கள் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2 படிப்பை முடித்து 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். Clint-க்கு வாய்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் பதிலளித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர்/சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணியை பெறும் நபர்கள் அலுவலகத்தை சுற்றி 20 கிலோமீட்டருக்குள் வசிக்க வேண்டியிருக்கும். Cab வசதி இருக்கும். வீட்டில் இருந்து பிக்அப், டிராப் சேவை உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். இருப்பினும் பிரிட்டன் ஷிப்ட் (UK Shift) வகையில் ரோட்டேஷனல் முறையில் பணியாற்ற வேண்டியிருக்கும். மாதசம்பளமாக ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதி, அக்டோபர் 1ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த 2 நாட்களும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. HCL ETA-1 - Villagae and Panchayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Chegalpattu, Tamil nadu 603 103 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications