80000க்கு மேல் சம்பளம்... பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு அருமையான சான்ஸ்
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 23ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இந்தியா முழுவதும் சுமார் 10,189 கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி என்பதால் பல லட்சம் கோடி வணிகம் கொண்ட வங்கியாகும் டெல்லியை தலைமையிடமாக கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில், நாடு முழுவதும் சுமார் 1,02,746 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த எண்ணிக்கை சற்று மாறுபடலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள லோக்கல் பேங்க் ஆபீசர் பதவிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 750 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொதுவாக இவர்களுக்கான சம்பள விகிதம் என்பது ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-I பிரிவின் கீழ் வரும். எனவே
இந்த பதவிக்கான ஆரம்ப அடிப்படைச் சம்பளம் தோராயமாக ரூ.48,480/- ஆக இருக்கும். அதேநேரம் அலவன்ஸ்கள் (HRA, DA, CCA போன்றவை) மற்றும் பிற சலுகைகளைச் சேர்த்தால், ஆரம்ப நிலையில் உள்ள ஒரு அதிகாரிக்கு மொத்த சம்பளமாக ஒரு மாதத்திற்கு ₹80,000 முதல் ₹85,920 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
எனினும் சம்பள விகிதங்கள், பணியிடத்தின் நகரம், அலவன்ஸ்களின் மாறுபாடுகள் மற்றும் லேட்டஸ்ட் ஊதிய திருத்தங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்பதால் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மனித வளத்துறை வெளியிட்ட விளம்பரத்தில் உள்ள தகவல்களை அப்படியே பார்ப்போம்.
பதவியின் பெயர் :லோக்கல் பேங்க் ஆஃபிஸர் (JMG Scale - I)
காலியிடங்கள்:750
வயது வரம்பு (01.07.2025 நிலவரப்படி):குறைந்தபட்சம்: 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கட்டாயத் தகுதி / மொழித் திறன் / அனுபவம்:
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் (23.11.2025 ங
மொழித் திறன்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் குறிப்பிட்ட உள்ளூர் மொழியில் (படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல்) திறமை பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் அல்லது அதிகாரிப் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பதவிக் காலத்திற்குப் பிந்தைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத் தேதி விவரங்கள்
விண்ணப்பங்களை சமர்பிக்கும் முறை: ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.11.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2025
மேலும் விவரங்களுக்கு: வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pnb.bank/in/recruitment.aspx -ஐப் பார்க்க வேண்டும்.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications