IT JOBS: அனுபவம் வேண்டாம்.. Deloitte ஐடி நிறுவனத்தில் வேலை ரெடியா இருக்கு.. பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டெலாய்ட் (Deloitte) நிறுவனத்தில் தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை.

2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம்செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 60 சதவீதம் அல்லது 6.5 சிஜிபிஏ வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் பிஇ, பிடெக் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், அலைட் கம்யூட்டர் சயின் பிரான்சஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி முடித்தவராக இருக்க வேண்டும். அதேபோல் 5 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படிப்பை படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். எம்சிஏ முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். உலகளாவிய கிளைன்ட் உடன் பேச தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் மைக்ரோசாப்ட் எக்றால், வேர்ட், பவர்பாயிண்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் அப்ரண்டீஸ்ஷிப் சட்டத்தின் கீழ் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஓராண்டு Probation டைமாக இருக்கும். அதன்பிறகு அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (ரைட்டிங், ஸ்பீக்கிங் மற்றும் பிரசென்டேஷன்) உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.
குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் இந்தியா உள்பட வேறு எந்த இடத்திலும் கடந்த 6 மாதத்தில் டெலாய்ட் நிறுவன இண்டர்வியூவில் பங்கேற்று இருக்க கூடாது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications