IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. சென்னை HCL-யில் நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (ஏப்ரல் 6), நாளை மறுநாள் (ஏப்ரல் 7) மற்றும் ஏப்ரல் 8 என 3 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. அரியர்ஸ் இருப்போரும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Banking Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான இண்டர்வியூவில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ உள்ளிட்ட படிப்ஐபகளை முடித்தவர்கள் பங்கேற்க வேண்டாம்.
என்னென்ன தகுதி?
மாறாக கல்லூரியில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் அரியர்ஸ் இருப்போரும் விண்ணப்பம் செய்யலாம். எந்த பிரிவில் டிகிரி படித்திருந்தாலும் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பட்ட மேற்படிப்பு என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
ஷிப்ட் எப்படி?
மேலும் பணியை விரும்பும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுவதும் தெரிந்திருக்க வேண்டம். இன்பர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது UK Shift முறையில் தான் இருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட் பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.
சம்பளம் என்ன?
Inbound மற்றும் Outbound Callsக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது.
3 நாள் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை முதல் ஏப்ரல் 8 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganllur - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இங்கு தான் Face to Face முறையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்லக்கூடாது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications