டிகிரி போதும்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்ட்டன்ட் ஆபிசர் வேலைக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனமான இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 33,500 பேர் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு ரூ.1,313 கோடியை லாபமாக இந்நிறுவனம் ஈட்டுகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக நிறுவனத்தில் அசிஸ்ட்டன்ட் ஆபிசர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மட்டுமல்லாது இதில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் நாட்டின் எந்த மூலையிலும் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல விண்ணப்பதாரர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான https://www.iocl.com/க்கு சென்று அதில் கெரியர் எனும் ஆப்ஷனுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அல்லது https://iocl.com/latest-job-opening எனும் வெப்சைட்டுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் Merit List, Document Readiness, Short Listing Process மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட விவரங்கள் https://ioclapply.com/Images/Notifications/IOCL-AO-2023-Advertisement.pdf எனும் இணைய பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications