15000 பேருக்கு வேலை.. சென்னையில் காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: வேலை வேண்டும், அதுவும் நல்ல வேலை வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். குறிப்பாக சென்னையில் பலருக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது அதிகமாக உள்ளது. அவர்களுக்காக சென்னை கொட்டிவாக்கத்தில் நவம்பர் 25-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற போகிறது.
சென்னையை பொறுத்தவரை பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை தேடி அலைகின்றன. இதேபோல் சென்னையில் பல இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். அவர்களை பொறுத்தவரை நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, வேலையில் குறைவான ரிஸ்க் ஆகியவை இலக்காக உள்ளது.

இப்படியான சூழலில் பலரும் சென்னையில் எங்கு வேலை காலியாக உள்ளது. நமக்கு பிடித்த வேலையா, சம்பளம் எவ்வளவு என்று நிறையவே யோசிக்கிறார்கள். நிறுவனங்களுமே தங்களுக்கு ஏற்ற பணியாளர்களை தேடி அலைகின்றன. இருதரப்பையும் இணைக்கும் வகையில் சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 25ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெற போகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தின் 4-ஆவது மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கொட்டிவாக்கம் நெல்லை நாடாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.25) காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி வரை, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல்கற்றவா்கள் என அனைத்து தகுதியுள்ள நபா்களும் கலந்து கொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்" இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications