தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கை நிறைய சம்பளத்தில் சூப்பர் பதவிக்கு வேலை காலி!
சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இரு உயர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேலைவாய்ப்பு 2020 படி மேலாளர் அல்லது உதவி மேலாளர் பணிகளுக்கு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு nhai.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலாளர் பணிக்கு 4 இடங்கள் உள்ளன. அவற்றில் மாதச் சம்பளமாக ரூ 15,600 முதல் 39, 100 வரை வழங்கப்படுகிறது.
அது போல் உதவி மேலாளர் பணிக்கு இரு இடங்கள் உள்ளன. ரூ 9,300 முதல் 34,800 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம்.. டிச. 18 இல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றிடுங்கள்!
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு Administration/ Establishment/ Human Resource/ Personnel Management பிரிவில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அது போல் உதவி மேலாளர் பணிக்கு Administration/ Establishment/ Human Resource/ Personnel Management பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் DGM (HR and Admn)- I-A, National Highways Authority of India, Plot No G-5&6, Sector - 10, Dwarka, New Delhi- 110075 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.