50 ஆயிரம் வரை சம்பளம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலை
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நல்ல வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
ஹைகோர்டில் நேரடி தேர்வின் மூலம் அலுவலக உதவியாளர், சோப்தார், சமையல்காரர், காவலாளி, புத்தக மீட்டமைப்பாளர் உள்பட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏப்ரல் 21ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

மொத்த பணியிடங்கள்
விளம்பர அறிவிக்கை எண்.36/2021 14.03.2021
மொத்த காலியிடங்கள்: 367
காலியிடங்கள் முழு விவரம்:
சோப்தார் - 40
அலுவலக உதவியாளர் - 310
சமையல்காரர் - 01
வாட்டர்மேன் - 01
ரூம் பாய் - 04
காவலாளி - 03
புத்தக மீட்டமைப்பாளர் - 02
நூலக உதவியாளர் - 06

வயது வரம்பு
ஊதியம்: மாதம் ரூ.15,700 - 50,000 (Pay Level - 1)
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ( பொது பிவில் 02.07.1991 பின்பு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்). பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி, எஸ்டிசி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். (அதாவது 02.07.1986 முன்பு பிறந்திருக்க கூடாது, 01.07.2003க்கு பின்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்)
8ம்வகுப்பு தேர்ச்சி
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (ஒவ்வொரு பணிக்கு) கட்டணமாக செலுத்த வேண்டும். அதேநேரம் எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதவற்ற விதவைகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் முழு விலக்களிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications