42 நாட்கள்.. நாடு முழுக்க உள்ள அரசு ஊழியர்களுக்கு மோடி தந்த சர்ப்ரைஸ்.. எத்தனை வருட எதிர்பார்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 42 போனஸ் விடுப்பு நாட்கள் அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்து உள்ளது. மில்லியன் கணக்கான பயனாளிகள் இதன் மூலம் நிதி ஆண்டில் கூடுதல் விடுப்பு நாட்களை பெறுவார்கள்.

இந்தக் கொள்கையின் கீழ் விடுப்பு ஜூலை 1, 2025 முதல் கணக்கிடப்படும் என்று மத்திய பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு சாதாரண, சம்பாதித்த மற்றும் மருத்துவ விடுப்புகளைத் தவிர, கூடுதலாக ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் 42 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.

ஏன் இந்த போனஸ் லீவ்?

கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு நம்பிக்கை, வெகுமதி அளிக்க மத்திய அரசாங்கம் விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. போனஸ் விடுப்பு என்பதால் எல்லோருக்கும் இது கிடைக்காது. இந்த விடுப்பிற்கு கூடுதல் தகுதிகள் நிர்ணயம் செய்யப்படும். ஒருவர் செய்யும் வேலை சிறப்பாக இருக்கிறதா.. அவர்கள் இதற்கு தகுதியானவர்களா என்பதும் இதன் மூலம் நிர்ணயம் செய்யப்படும்.

Pm Modi cabinet approves the 42 days bonus holidays for Union Government Employees

தகுதிகள் என்னென்ன?

அனைத்து முழுநேர மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுப்பு பெற தகுதி உண்டு

ஜூலை 2025 இல் பணியாளர்கள் குறைந்தபட்சம் தொடர்ந்து 1 வருடம் பணியாற்றியிருக்க வேண்டும்

ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.

முக்கிய அம்சங்கள்

போனஸ் இலைகள் ஆண்டின் இறுதியில் காலாவதியாகாது மற்றும் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டு செல்லப்படலாம்.

ஓய்வு பெறும் நேரத்தில், போனஸ் லீவில் ஒரு பகுதியைப் பணமாகப் பெறுவதற்கான விருப்பமும் பணியாளர்களுக்கு உண்டு.

எப்போது அமலுக்கு வரும்?

இந்தக் கொள்கையின் கீழ் விடுப்பு ஜூலை 1, 2025 முதல் கணக்கிடப்படும் என்று மத்திய பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பணிக்குழு வருகிறது

ஏற்கனவே 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதை அமல்படுத்துவதற்கான குழு உருவாக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அரசு ஊழியர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்காக ஒரு உருவாக்கப்பட்டு வருகிறது.

1. அதாவது இந்த குழு சார்பாக பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள்.

2. அந்த பணியாளர்களுக்கு பல விதமான பொறுப்புகள், வேலைகள் வழங்கப்படும்.

3. இவர்கள்தான் 8வது ஊதியக்குழுவின் அடிப்படை விதிகளை நிர்ணயம் செய்வார்கள்.

4. 8வது ஊதியக்குழு எப்படி செயல்பட வேண்டும். என்ன மாதிரியான வசதிகள் இருக்க வேண்டும் என்று இவர்கள்தான் நிர்ணயம் செய்வார்கள்.

5. முக்கியமாக பல சிஏ அதிகாரிகள், பொருளாதாரம் படித்தவர்கள் இந்த குழுவில் எடுக்கப்படுகின்றனர்.

6. சட்ட நிபுணர்களும் இந்த குழுவில் பணிக்கு எடுக்கப்பட உள்ளனர்.

எப்போது அமலுக்கு வரும்

8வது ஊதியக் குழு எப்போது வரும் என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி தற்போது சம்பள அமைப்பு, ஓய்வூதிய அமைப்பு நடைமுறையில் உள்ளது. 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன் சம்பள அமைப்பு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும். 8வது ஊதியக்குழு அடுத்த வருடம் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+