Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே லோகோ பைலட் பணி.. விண்ணப்பதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஆர்ஆர்பி வெளியிட்ட ஸ்வீட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தெற்கு ரயில்வே உள்பட ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 5,696 உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. தற்போது லோகோ பைலட்கள் பணியிடங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பணியிடங்கள் எண்ணிக்கை 18,799 ஆக அதிகரிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகவும் லட்சக்கணக்கான ஊழியர்களையும் கொண்டதாக ரயில்வே உள்ளது.

job jobs employment govt jobs rrb railway railway job

கைநிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு போன்றவற்றால் ரயில்வே பணிகளில் சேர இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. இதனால், ஆர்ஆர்பி தேர்வு அறிவிப்பினை வெளியிட்டதும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் ரயில்வேயில் உதவிலோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

தெற்கு ரயில்வே உள்பட ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 5,696 - உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. தற்போது லோகோ பைலட்கள் பணியிடங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பணியிடங்கள் எண்ணிக்கை 18,799 -ஆக அதிகரிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே மண்டலங்களில் இருந்து கூடுதல் லோகோ பைலட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்து, பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், ஆர்ஆர்பி இணையதளத்தில் மண்டல வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் தெளிவாக குறிப்பிடப்படும் எனவும் ரயிவே தெரிவித்துள்ளது.

ஏற்கனவே லோகோ பைலட் பணி நடைமுறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விருப்ப தேர்வை ரிவைஸ் செய்வதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும், இது பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் ஆர்ஆர்பி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதால் தேர்வர்கள் அவ்வப்போது செக் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லோகோ பைலட் பணியிடங்ளுக்கு ஐந்து கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்க்ள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழி தேர்வு (CBT ) இரண்டு கட்டங்களாக நடைபெறும். அதன்பிறகு CBAT எனப்படும் கணிணி வழி ஆப்டியூட் டெஸ்ட் நடைபெறும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ / பி.டெக் ஆகிய படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் முடித்து இருப்பது அவசியம். கல்வி தகுதி குறித்த விவரங்களை ஆர்ஆர்பி இணையளத்தில் செக் செய்து கொள்ளலாம்.

லோகோ பைலட் பணியிடங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக வெளியான அறிவிப்பை லோகோ பைலட் பணியாளர் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் வி பாலச்சந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். உதவி லோகோ பைலட் பணியிடங்களை அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் தெரிவித்து இருப்பது தற்போதைய லோகோ பைலட்களின் பணிசுமையை குறைப்பதாக அமையும்" என்றார்.

லோகோ பைலட்களின் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக பணியாளர்கள் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ரயில்வேயில் 21 சதவிகித லோகோ பைலட் பணியிடங்களும் 8 சதவிகித உதவி லோகோ பைலட் பணியிடங்களும் காலியாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி அண்மையில் கூறியிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+