நோ எக்ஸாம்.. என்எல்சி பைனான்ஸ் பிரிவில் வேலை.. நெய்வேலி, சென்னை, தூத்துக்குடியில் வாய்ப்பு! ரெடியா?
சென்னை: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நெய்வேலி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‛நவ்ரத்னா' நிறுவனத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிலக்கரி மற்றும் சுரங்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று தான் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியாகும்.
இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

என்எல்சி இந்தியா லிமிடெட் சார்பில் இன்டஸ்ட்டீரியல் டிரெய்னி (பைனான்ஸ்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நெய்வேலி யூனிட்டுக்கு 23 பேர், தூத்துக்குடி என்டிபிஎல்லுக்கு 6 பேர், சென்னை மண்டல அலுவலகம் , சென்னை மண்டல அலுவலம் (கமர்சியல்) ஆகியவற்றில் தலா 2 பேர் என உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 56 பேர் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் Chartered Accountant அல்லது சிஎம்ஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் சிஎம்ஏ படிப்புகளில் இன்டர்மிடியேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் Stipend ஆக வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். பணிக்காலம் என்பது 12 மாதங்கள்மட்டுமே. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.in இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications