TCS வேலைவாய்ப்பு.. ஐடி வேலை தான் வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க! தேதி முடியப்போகுது
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

டிசிஎஸ் எம்பிஏ ஆஃப் கேம்பஸ் என்ற பெயரில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ (MBA), எம்எம்எஸ் (MMS), பிஜிடிபிஏ (PGDBA), பிஜிடிஎம் (PGDM) உள்ளிட்ட படிப்புகளில் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனரல் மேனேஜ்மென்ட், பிசினஸ் அனலிடிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2023ல் படிப்பை முடித்தவர்களும், இந்த ஆண்டு படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்கக்கூடாது. அதோடு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு பணியில் முன்அனுபவம் கொண்டவர்கள் என்றால் 2 ஆண்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு மே மாதம் 10ம் தேதிக்குள் டிசிஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். TCS Next Step Portal-ல் சென்று முதலில் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் நேரடியாக IT Category என்பதை கிளிக் செய்து CT/DT ரெப்ரன்ஸ் நம்பரை பதிவிட்டு விண்ணப்பம் செய்யலாம். புதியவர்கள் என்றால் முதலில் TCS Next Step Portal-ல் முதலில் ரிஜிஸ்ட்டர் செய்து மேற்கூறிய முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது Select Your Mode of Test என்பதில் In Center என்பதை கிளிக் செய்து விரும்பும் தேர்வு மையத்தை செலக்ட் செய்யவும். விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு என்பது ஜுன் மாதம் 17 ம் தேதி நடைபெறும். தேர்வு என்பது 3 வகைகளில் நடக்கும். Verbal Ability, Numerical Ability, Business Aptitude என்பதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.
இந்த பணி தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. யாராவது வேலை தொடர்பாக போன் செய்து பணம் செலுத்த கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் மற்றும் பணியமர்த்தப்படும் இடங்கள் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications