நீங்க 10-ம் வகுப்பு பாஸா... ரிசர்வ் பேங்க்ல வேலை இருக்கு... லேட் பண்ணாம இதை படிங்க!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் 841 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்திய ரிசர்வ் வங்கியில் office attendants பணியிடங்களுக்கு 841 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணபிப்பதற்கான வயது வரம்பு 18-25 ஆகும்.
10 வகுப்பு படித்திருந்தால் போதும்... அட்டகாசமான மத்திய அரசு வேலை ரெடி... மறக்காம அப்ளை பண்ணுங்க
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.03.2021 ஆகும்.
ஏப்ரல் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட மேலும் பல விவரங்களை www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.