கட் ஆஃப் குறையுது.. காலிப்பணியிடங்கள் 10 ஆயிரமாக உயருது? குரூப் 4 எழுதியவர்களுக்கு அடிக்குது யோகம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குரூப் 4 பணியிடங்கள் 10,000 என்ற வகையில் மேலும் உயர்த்தப்படலாம் என்றும், இதனால் கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வுதான். ஏனெனில் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த குரூப் 4 தேர்வில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகளவிலான விண்ணப்பங்கள் வருகிறது. எப்போது குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என பல லட்சம் இளைஞர்கள் இந்த எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.
நபார்டு வங்கியில் வேலை.. மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி.. அருமையான வாய்ப்பு
அந்த வகையில் தான் சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வானது கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 7,247 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட 6244 பணியிடங்கள் போக கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயில் டெக்னீசியன் பணி.. விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு.. மிஸ் பண்ணவங்க அப்ளை பண்ணுங்க
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:- "தமிழகத்தில் அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குரூப் 4 தேர்வு காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் என இருக்க வாய்ப்பு உள்ளது. எத்தனை இடங்கள் அதிகரிக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதிகரிக்கப்படும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் இந்த அறிவிப்பு குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மார்க்கும் குறையும். வரும் அக்டோபர் 2 வது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. தற்போது குரூப் 4 பணியிடங்கள் 6,724 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications