கட் ஆஃப் குறையுது.. காலிப்பணியிடங்கள் 10 ஆயிரமாக உயருது? குரூப் 4 எழுதியவர்களுக்கு அடிக்குது யோகம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குரூப் 4 பணியிடங்கள் 10,000 என்ற வகையில் மேலும் உயர்த்தப்படலாம் என்றும், இதனால் கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வுதான். ஏனெனில் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த குரூப் 4 தேர்வில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகளவிலான விண்ணப்பங்கள் வருகிறது. எப்போது குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என பல லட்சம் இளைஞர்கள் இந்த எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.
நபார்டு வங்கியில் வேலை.. மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி.. அருமையான வாய்ப்பு
அந்த வகையில் தான் சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வானது கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 7,247 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட 6244 பணியிடங்கள் போக கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயில் டெக்னீசியன் பணி.. விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு.. மிஸ் பண்ணவங்க அப்ளை பண்ணுங்க
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:- "தமிழகத்தில் அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குரூப் 4 தேர்வு காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் என இருக்க வாய்ப்பு உள்ளது. எத்தனை இடங்கள் அதிகரிக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதிகரிக்கப்படும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் இந்த அறிவிப்பு குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மார்க்கும் குறையும். வரும் அக்டோபர் 2 வது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. தற்போது குரூப் 4 பணியிடங்கள் 6,724 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
IT Jobs: மார்ச் 14ல் இண்டர்வியூ.. எச்சிஎல் முக்கிய அறிவிப்பு.. சூப்பர் வேலை -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. அழைக்கும் HCL.. மார்ச் 14ல் சென்னையில் இண்டர்வியூ -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications