ரயில்வேயில் டெக்னீசியன் பணி.. விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு.. மிஸ் பண்ணவங்க அப்ளை பண்ணுங்க
சென்னை: ரயில்வேயில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் புதிதாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். 14,298 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆர் சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) மூலமாக அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வேயில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மொத்தம் எத்தனை பணியிடங்கள் உள்ளன? என்பது குறித்து விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டெக்னீஷியன் கிரேடு I சிக்னல் - 1,092 பணியிடங்கள்
டெக்னீஷியன் கிரேடு III - 8,052 பணியிடங்கள்,
டெக்னீஷியன் கிரேடு III- 5,154 பணியிடங்கள் என மொத்தம் 14,298 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி: கல்வித்தகுதியானது பணியிடங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிஎஸ்சி படித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக டெக்னீஷியன் கிரேடு I சிக்ன பணிக்கு பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிமனையில் டீசல் மெக்கானிக் பணிகளுக்கு 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு: 01.07.2024- நிலவரப்படி டெக்னீசியன் கிரேடு I பணிக்கு 18 வயது முதல் 36 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் கிரேட் - III - பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 33 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: டெக்னீசியன் கிரேட் I பணிக்கு ரூ. 29,200 சம்பளமும், டெக்னீசியன் கிரேட் III பணிக்கு ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும். இந்த அடிப்படைச் சம்பத்துடன் இதரச் சலுகைகளும் உண்டு.
டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசத்தை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் புதிதாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விருப்ப தேர்வை மாற்ற வேண்டும் என்றாலும் விண்ணப்பத்தை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும்.
அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பதார்கள் தங்கள் விண்ணப்பங்களை எடிட் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக தனியாக ரூபாய் 250 செலுத்த வேண்டும். இது குறித்த முழு விபரங்களை ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications