ரெடியா? தேர்வு கிடையாது.. ரூ.43,000 வரை சம்பளம்.. திருச்சி ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு..
திருச்சி: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் திருச்சி மாவட்ட ஆவினில் மாதம் ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்டம் வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருச்சி மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும்.

இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் முறையில் தான் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்க்காணல் என்பது மே மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
நேர்க்காணல் திருச்சியில் உள்ள கொட்டப்பட்டுவில் அமைந்து இருக்கும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், திருச்சி -620 023 என்ற முகவரியில் நடக்க உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications