முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதியன்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜனவரி 10ம் தேதி நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மொத்தமுள்ள ஆயிரத்து 807 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 16 ஆம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தேர்வருக்குமான அழைப்புக் கடிதமும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ள இடங்களின் விவரங்களும் விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications