‛ஆண்களோடு பெண்களுக்கும் வாய்ப்பு’.. மத்திய ஆயுதப்படைகளில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 506 உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி முடித்த ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு படைப்பிரிவுகள் உள்ளன. இந்த படைப்பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் யுபிஎஸ்சி எனப்படும் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் மத்திய போலீஸ் ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: மத்திய ஆயுதப்படையில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள 506 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படையில் 186 காலியிடங்கள், சிஆர்பிஎஃப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 120 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 100 இடங்கள் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் பிரிவில் (ஐடிபிஎஃப்) 58 காலியிடங்கள், எஸ்எஸ்பி படையில் (SSB or Sashastra Seema Bal) 42 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: வயது வரம்பு என்பது 2024 ஆகஸ்ட் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த தேதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் 1999 ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 2004 ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். அதேபோல் பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி தளர்வு என்பது உண்டு.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு விதிகளின்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணையதளம் மூலம் மே மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மெடிக்கல் டெஸ்ட, மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications