தூக்கம் கண்ணைக் கட்டுதா.. வாங்க "கடி"க்கலாம்...!
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.. மணி 3 க்கு மேல் ஆனாலும் கூட தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் பலருக்கும்...
எப்படியாப்பட்ட தூக்கத்தையும் கடி ஜோக்ஸ் கடித்துக் குதறி விட்டு வி்டும்...
வாங்க கொஞ்சம் போல கடிச்சுக்கலாம்...
பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.
அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....!
என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...
பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே.. ஏன்....???
குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....!
பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... அப்போ பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?
என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் "சுட்டு"த்தான் சாப்பிடனும்.
என்ன தான் "திமுக" காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது "அம்மா" என்று தான் கத்தும்...!
ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.
உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டால் எல்லா சீசனுக்கும் விற்கும்....!!!!!!!!!!!












Click it and Unblock the Notifications