எல்லாம் மறந்து போச்சே...!
அப்பாசாமிக்கு வயது 75 ஆகி விட்டது. மனைவி இறந்து போய் பல காலமாகி விட்டது. மறுமணம் குறித்த சிந்தனையுமின்றி, செக்ஸ் குறித்த சிந்தனையுமின்றி வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென திருமண ஆசை இடுப்பைக் கிள்ளியது. இளம் வயதுப் பெண்ணாக பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்த அவர் 18 வயது பெண்ணை திருமணம் செய்தார்.
முதலிரவும் வந்தது. கதவை மூடிக் கொண்டனர் புதுமணத் தம்பதியர். சிறிது நேரம் போயிருக்கும். முதலிரவு அறையிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது.
இதையடுத்து உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே போய்ப் பார்த்தால் தாத்தாவும், அவரது புதுமனைவியும் ஆளுக்கு ஒரு பக்கமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர்.
என்னாச்சு என்று அவர்களிடம் கேட்டபோது, தாத்தா சொன்னார், இந்தப் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியலை. எனக்கோ எல்லாமே மறந்து போச்சு என்று கூறி மீண்டும் கதறியழத் தொடங்கினார்...












Click it and Unblock the Notifications