குழந்தை நீதி கதைகள்: அப்படியொரு ஆனந்தம் ஷைலேஷ் முகத்தில்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ்.. எப்படி இருக்கீங்க? யாரோட ஊரில் எல்லாம் மழை வெளுத்து வாங்குகிறது. புயலின் தாக்கம் இருக்கிறதா.. சரி இப்போ நம்ம கதைக்குள்ள போகலாமா..
ஷைலேஷ் மிகவும் நல்ல பையன். அவனது அம்மாவும் மிகவும் நல்லவர். ஷைலேஷிடம் நல்ல விளையாட்டு பொம்மைகள் இருந்தன. அதனுடன் அவனுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளும் இருந்தது.

ஆனால் முக்கியமாக பக்கத்து வீட்டில் இருக்கும் ராஜாவிற்கு கொடுக்கமாட்டான். ராஜாவின் வீட்டில் கொஞ்சம் ஏழ்மை தான். அவர்களால் பொம்மைகளுக்காக செலவு செய்ய முடியாது. ராஜா எப்போதும், ஷைலேஷ் விளையாடும் போது அதை உற்று கவனித்து பார்ப்பான். அவனை பார்க்கும் ஷைலேஷ் உடனடியாக மறைத்து வைப்பான்.
இதை கவனித்த ஷைலேஷ் அம்மா, அவனையும் விளையாட சேர்த்து கொள்ளலாம் இல்லையா? ஏன் அவனை ஏற்க மறுக்கிறாய் என்று கேட்க, அவன் ஒருவேளை என் பொம்மைகள் உடைந்துவிட்டால் நான் என்ன செய்வேன் என பதில் அளித்தான்.
ஒருநாள் ரோஹனின் அப்பா வெளிநாட்டில் இருந்து சில பொம்மைகளை வாங்கி வந்தார். ரோஹன், ஷைலேஷை வீட்டிற்கு விளையாட அழைத்தான். ஷைலேஷும் சந்தோசமாக ரோஹன் வீட்டிற்கு செல்ல, அங்கு ஒரு பெரிய பொம்மை ரயில் இருந்தது. அதன் ரயில் பாதைகளை இருவரும் ஒன்றாக சேர்ந்து அதை வரிசை படுத்தினார்கள். மேலும் அதில் சில சிக்னல்கள், ஸ்டேஷன் மாஸ்டர், பிளாட்பார்ம் என உண்மையான ரயில் தடங்களுக்கு தேவையான பொம்மைகள் இருந்தன.
அதை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க எடுத்து வைக்க ரோஹணின் அப்பாவிற்கும் அதில் ஆர்வம் அதிகமாக 3 பேரும் ஒன்றாக விளையாடினார்கள். அது ஷைலேஷிற்கு நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்கு வந்து ஷோபாவில் ஏறி குதித்து கொண்டிருந்தான்.
இவ்வளவு குஷியாக இருக்க என்ன காரணம் என அம்மா கேட்க, ஷைலேஷ் ரோஹன் கொடுத்த ரயில் பொம்மைகளை பற்றி பேசி கொண்டிருந்தான். ஜாலியாக இருந்தது அம்மா, அடுத்த முறை எப்போது கூப்பிடுவான் என ஆசையாக இருக்கிறது என்று சொன்னான் ஷைலேஷ்.
ரோஹன் கொடுத்ததனால் நீயும் மகிழ்ச்சியாக இருந்தாய், அவனும் உன்னுடன் நன்றாக விளையாடினான் அல்லவா என்றார் அம்மா. ஆமாம் ஆமாம் என்றான் ஷைலேஷ். அப்போ நீ ராஜாவிற்கு கொடுத்து விளையாடினால் நீங்கள் இருவருமே சந்தோசமாக இருக்கலாம் தானே என்றார் அம்மா. ஆனால் அம்மா.. என்றான் ஷைலேஷ். ஒருவேளை ரோஹன் உன்னை அழைக்கவில்லை என்றல் உனக்கு இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்குமா என்றார் அம்மா. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ஷைலேஷ்.
சரி.. உன் இஷ்டம் என்று சொல்லி அம்மா நகர்ந்தார். பொழுது சாயும் நேரத்தில் ஷைலேஷ் வீடு வாசலில் கால் பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அதை தூரமாக இருந்து ராஜா உற்று பார்த்தான். ஷைலேஷ் ராஜாவை பார்த்ததும் விளையாட வரியா என்று கேட்டான். ராஜாவும் துள்ளி குதித்து விளையாடினான். ஒருவழியாக இருவரும் சந்தோசமாக மணிக்கணக்கு தெரியாமல் விளையாடி கொண்டிருந்தார்கள்.

நேரம் இருட்ட ஆரம்பித்ததும் தான் இருவரும் பிரிந்து சென்றார்கள். ஷைலேஷ் அம்மாவிடம் வந்து அம்மா நீங்கள் சொன்னது சரிதான். நான் ராஜாவுடன் சேர்ந்து விளையாடும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளை நாங்கள் இருவரும் எனது கிரிக்கெட் கிட் வைத்து விளையாட போகிறோம் என்று குஷியாக சொன்னான். அம்மாவுக்கு மகனின் இந்த குணத்தை மாற்றியது மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆகையால் குழந்தைகளே உங்கள் அருகில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொடுத்தால் அளவில்லாத ஆனந்தம் உங்களுக்கும் கிடைக்கும்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications