நல்லா சாப்ட்டு, தூங்கி.. பழசெல்லாம் பத்த மாட்டுதே.. இப்போ யூனிபார்முக்கு என்ன பண்றது?
பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தாக்கத்தால் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகளை அரசு மீண்டும் திறக்க முடிவு செய்திருக்கிறது. இதைக் கேட்டு, மாணவர்களின் ரியாக்ஷன் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ஒமைக்ரானால் இந்த வருடமும் ஆன்லைனிலேயே வகுப்பை முடித்து விடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தனர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள். ஆனால் பிப்ரவரி முதல் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக அரசு அறிவித்து விட்டது.

இந்த அறிவிப்பைக் கேட்டு கொஞ்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், நிறைய பேருக்கு கவலைதான் அதிகரித்துள்ளது என்பது சமூகவலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.

ஆன்லைன் என்ற பெயரில் வீட்டிலேயே இருந்து, சாப்பிட்டு, தூங்கி பழகி விட்டதால், பழைய யூனிபார்ம் எல்லாம் மீண்டும் பத்துமா என்ற கவலை ஒரு சிலருக்கு. மற்றொரு குரூப்போ, 'இந்த வருடம் எப்படியும் ஆன்லைன் தான்..' என நினைத்து தங்களது புத்தகங்களை பழைய பேப்பருக்கு போட்டு விட்டதாகவும், போகியில் எரித்து விட்டதாகவும் பீல் செய்து கொண்டிருப்பதாகக் கலாய்த்து பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அவற்றில் ஜாலியான சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...












Click it and Unblock the Notifications