என்னங்க இது.. எப்டித் தொறத்துனாலும் நம்மகிட்டயே வருது.. ச்சை!
சென்னை : மார்கழிப் பனியோடு மழையும் சேர்ந்து கொள்ள, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது புலம்பல்களை எல்லாம் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்தாண்டு மழைக்கு முன்னதாகவே பனி கொட்டத் தொடங்கி விட்டது. நவம்பர் மாதத்திலேயே அப்படி என்றால், பனிக்குப் பேர் போன மார்கழி மாசத்தில் பனி எப்படி இருக்கும் எனச் சொல்லத் தேவையேயில்லை. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழையோடு, பனியும் சேர்த்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சென்னையில் ஒரு மாதிரி வானிலையும், அதற்கு நேரெதிராக தென் மாவட்டங்களில் வேறு மாதிரி வானிலையும் நிலவுகிறது. இங்கு பகலிலேயே குளிர் வாட்டி எடுக்கிறது என்றால், அங்கு இரவிலும் வேர்த்துக் கொட்டுவதாகப் புலம்புகின்றனர். பிறகென்ன இந்த வெயிலையும், குளிரையும் கலந்து கட்டி நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கூடவே, “என்னங்க இது.. எப்டித் தொறத்துனாலும் நம்மகிட்டயே வருது.. ச்சை!” என சளி, காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றையும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications