பாகிஸ்தான் மாணவர்கள் யாராவது இங்க வந்து சாப்பிட்டா ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.. அதுக்குதானே!!
பிரதமர் மோடியின் ஆதார் அரசை கலாய்த்தும் வெறுப்பேற்றியும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: மானியம் பெறுவதில் இருந்து மதிய உணவு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என மோடி அரசு தெரிவித்துள்ளது. எதற்கெடுத்தாலும் ஆதார் எங்கே போனாலும் ஆதார் என ஆகிவிட்டது.
மோடியின் இந்த ஆதார் அரசை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். இன்னும் எதுக்கெல்லாம் ஆதார் கார்டு கேட்பார்களோ என பீதியில் உள்ளனர் மக்கள்.
ஆதார் என்றாலே மக்களுக்கு அலர்ஜியாகிவிட்டது. அந்தளவுக்கு ஆதார் கார்டு அரசு திட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கிண்டலடித்து கேசரி கிண்டியுள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக..
ஆதார் நம்பர் தெரியுமா?
எல்லாம் தெரியுங்கிற ஆதார் கார்டு நம்பர் தெரியுமா..?
மதிய உணவுக்கு ஆதார் அவசியம்
பாகிஸ்தான் மாணவர்கள் யாராவது சத்துணவு சாப்பிட்டா ஈசியா கண்டுபிடிக்கதானே...
சத்துணவுக்கும் ஆதார்
சத்துணவு சாப்டுற புள்ளைங்ககிட்ட கூட ஆதார் கார்டு கேட்டுட்டு திரியிது...
இதுக்கும் கேப்பாங்களோ?
இதுக்கும் ஆதார் கார்டு கேப்பாங்களோன்னு கலாய்க்கிறது இந்த மீம்ஸ்...
ஒருவரும் நம்ப மாட்டார்களே
ஆதார் அட்டையை தொலைத்துவிட்டேன்.. இனி நான்தான் பிரதமர் என்று சொன்னாலும் ஒருவரும் நம்ப மாட்டார்களே...
உன் பையனுக்கு திமிர பாரு
நான்தான் அப்பன் சொன்னாலும் நம்பாம ஆதார் கார்டு காட்டுங்கிறானே...