ஏன்யா கைது பண்ண ஒரு நேரம்காலம் இல்லையா அர்த்த ராத்திரியில அலேக்கா தூக்கிட்டீங்களே..!!
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இரட்டை இலைச்சின்னத்தை பெற டிடிவி தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திர சேகர் என்பவரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் அவரிடம் 4 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். சசிகலா குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தாலும் கலாய்த்து மகிழும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தினகரன் கைதை வச்சு செய்துள்ளனர்.

எங்க குடுமி உங்க கைல
ஏண்ணே, இந்த கைதுக்கு கண்டன அறிக்கை குடுக்கவா இல்ல பேசாமா இருக்கவா... இப்போ நீங்க செல்றதத்தான் நாங்க் கேக்கனும்... ஏன்னா எங்க குடுமி உங்க கைல இருக்கு...

அதான்டா அரசியல் அனுபவம்
எப்படி ஆடவிட்டு அடிச்சேன் பாத்தியா,,, அதான்டா அரசியல் அனுபவம்னு சொல்றது..

நேரம்காலம் இல்லையா
ஏன்யா கைது பண்ண ஒரு நேரம்காலம் இல்லையா அர்த்த ராத்திரியில அலேக்கா தூக்கிட்டீங்களே..

புஜ்ஜிக்கு.. புஜ்ஜிக்கு..
லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது.. புஜ்ஜிக்கு.. புஜ்ஜிக்கு.. என கிண்டலடிக்கிறது இந்த மீம்...

குட் நியூஸ்.. பேட் நியூஸ்
ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ்.. என டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதைக் கலாய்க்கிறது இந்த மீம்..












Click it and Unblock the Notifications