பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா.... இந்த சேவல், இரட்டை புறா... இதெல்லாம் வேணாமா...
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல் நிலவரங்கள் ஆகியவற்றை நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர் அவற்றுள் சில.

இரட்டை இலை சின்னமே தான் வேணுமா?
இரட்டை இலை சின்னமேதான் வேணுமா இந்த இரட்டை சேவல், இரட்டை புறா இதெல்லாம் வேண்டாமா என ஓ.பன்னீர் செல்வத்திடம் தேர்தல் ஆணையம் கேட்பது போல் உள்ளது.

பஞ்சாப்ல ஏன் அலை அடிக்கல?
மோடி அலையால்தான் ஜெயிச்சிங்கன்னா, அந்த அலை ஏன் பஞ்சாப்ல ஏன் அடிக்கல. அது வேற டிபார்ட்மென்ட், ஆளும்கட்சிக்கு எதிரான இன்கம்பென்ட் வேவ்.

நம்ம மனநிலை
பாஜக எங்கேயும் ஜெயிக்கக் கூடாது என்பது நம்ம மனநிலை... ஆனா பாஜக எங்கேயாவது ஜெயிச்சாபோதும் என்பது தமிழ்நாட்டு பக்தாள் நிலை.

உத்தரகாண்டில் காங்கிரஸ் வெற்றி
உத்தரகாண்டில் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்களே, அது உங்கள் கட்சித் தலைவர்களுக்குத்தான் என்று தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸுக்கு பாஜக ஆறுதல் சொல்வது போல் உள்ளது.












Click it and Unblock the Notifications